வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கு படையினரால் நிவாரண பொதிகள்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கு படையினரால் நிவாரண பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி பாரதிவித்தியாலயத்தில் உள்ள 200 குடும்பங்களிற்கும், கிளிநாச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் 175 குடும்பங்களிற்கும், திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் உள்ள 201 குடும்பங்களிற்கு இவ்வாறு படையினரால் உலருணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் பல பகுதிகளிலும் இவ்வாறு படையினரால் பொதிகள் வழங்கி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Copyright © 2656 Mukadu · All rights reserved · designed by Speed IT net