அனைத்து அமைச்சர்களும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும்!

அனைத்து அமைச்சர்களும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும்!

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளைக் கோருகின்ற அரசாங்கத்த்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாடுகளையும் அவர் கண்டித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மாத்தளை பகுதியில் இடம்பெற்ற பேரணி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அரசியலும், அமைச்சர்களையும் எந்த நேரத்திலும் மாறக்கூடியவை என்றும் இதனால் உறுப்பினர்கள் பொது மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களாக பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கட்சி எதிர்கொள்ளும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பிலும் அனைத்து உறுப்பினர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறினார்.

மேலும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் உட்பட வரவிருக்கும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் என்றும் அவர் உறுதியாக கூறினார்.

எனவே இருக்கும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பொதுமக்களின் நலுனுக்காக செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

அனைத்துத் தேர்தல்களிலும் கட்சி வெற்றியைப் பெறும் என்றும் எதிர்காலத்தில் ஒரு முழுமையான அரசாங்கத்தை ஸ்தாபிப்க்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹாரே தெரிவித்தார்.

Copyright © 6613 Mukadu · All rights reserved · designed by Speed IT net