இலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள அறிவிப்பு!

பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.

புது வருடத்தை முன்னிட்டு பிரித்தானிய உயர் ஸ்தானிகர் James Dauris தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் நல்லிணக்கத்திற்காக, தேசிய மட்டத்திலும் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்தும் செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால சந்ததியின் முன்னேற்றம் கருதி, சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையையும் சிறந்த உறவையும் பேணுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் உதவியளிக்கும்.

2018ஆம் ஆண்டில் இலங்கையுடன் தமது நாடு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இலங்கை மாணவர்கள் மேற்படிப்புக்காக பிரித்தானியாவுக்கு சென்றனர்.

இந்த வகையில் எதிர்வரும் காலத்திலும் இலங்கை மாணவர்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net