வடமாகாண ஆளுநரை தொடர்ந்தும் வடமாகாணத்திற்கே கடமையில் அமர்த்த கோரி இன்று கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த கவனஈர்பபு குழுவினர், கிளிநொச்சி புகையிரத நிலையம் வரை சென்றனர்.
இன்று கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு ஜனாதிபதி வருகை தரக்கூடும் என கருதி குறித்த குழுவினர் கிளிநொச்சி புகையிரத நிலையம் வரை வருகை தந்தனர்.
எனினும் இன்று ஜனாதிபதி வருகை தராமையால் அங்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜரை கையளித்தனர்.
குறித்த போராட்டத்தில் வடமாகாண சுகாதார தொண்டர்கள், வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்கள்,
வட மாகாண ஆளுநர் வடக்கில் நேர்மையாக செயற்பட்டு வந்ததாகவும், அவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல பணிகள் இடையில் கைவிடப்பட்டுள்ள நிலை காணப்படுவதால், அவரை மீண்டும் வடமாகாணத்திற்கே நியமிக்க வேண்டும் என கோரினர்.
மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,
இன்று ஜனாதிபதிக்கு கையளிக்க கோரி மகஜர்கள் தம்மிடம் கையளிக்கப்பட்டதகவும், அவற்றை உடனடியாக ஜனாதிபதியின் கரங்களிற்கு கிடைக்ககூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.










