மாடுகளின் இறப்பினால் பால் உற்பத்தி பாதிப்பு!

மாடுகளின் இறப்பினால் பால் உற்பத்தி பாதிப்பு!

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக்காலமாக மாடுகள் இறந்து வருகின்றமையினால் பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக கிண்ணியா பிரதேசத்தில் மாடுகள் அதிகளவில் இறந்துவரும் நிலையைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் பால் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

அதிகளவில் பால் சேகரிக்கப்படும் இடங்களில் ஒன்றான சூரங்கல் பால் சேகரிப்பு நிலையத்தில் அண்மைக்காலமாக சுமார் 600 லிட்டர் வரையான பால் மாத்திரமே சேகரிக்கப்படுகின்றது.

மேலும், பால் சேகரிப்பு நிலையங்களில் நாளாந்தம் சுமார் 6000 முதல் 8000 லிட்டர் வரையில் பால் சேகரிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 5789 Mukadu · All rights reserved · designed by Speed IT net