சுரேன் ராகவன் மற்றம் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!

சுரேன் ராகவன் மற்றம் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றம் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்தச் சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஆளுநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அண்மையில் வடமாகாண சபையில் ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட கலாநிதி சுரேன் ராகவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net