பன்னங்கண்டி சுடர் ஒளி விளையாட்டு கழகமும், தயா சன சமூக நிலையமும் இணைந்து நடார்த்திய பொங்கல் விழா

பன்னங்கண்டி சுடர் ஒளி விளையாட்டு கழகமும், தயா சன சமூக நிலையமும் இணைந்து நடார்த்திய பொங்கல் விழாவும், பாரம்பரிய விளையாட்டு நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு பன்னங்கண்டி சுடர் ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது பொங்கல் பொங்கலிடப்பட்டதுடன், பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

நிகழ்வில் பா. ம உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பிரதேச சபை உறுப்பினர் அ.சத்தியானந்தம் ஊள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Copyright © 4313 Mukadu · All rights reserved · designed by Speed IT net