மட்டக்களப்பில் மரக்கடத்தலை முறியடித்த வன அதிகாரிகள்!!

மட்டக்களப்பில் மரக்கடத்தலை முறியடித்த வன அதிகாரிகள்!!

அனுமதியின்றி பெரும் எண்ணிக்கையிலான மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டக்களப்பு – புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகள் கைப்பற்றினர்.

மகாஓயா பகுதியிலிருந்து செங்கலடியை நோக்கி பிரதான வீதியில் சிறிய ரக பாரவூர்தியில் மரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனத்தை, வன அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன்போது சாரதி மரக்குற்றிகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதியப் பெற்றிருக்கவில்லை என்பது தெரியவந்தது.

பாரவூர்தியில் சுமார் 5 அடிநீளமுடைய 23 தேக்கு மற்றும் முதிரை மரக்குற்றிகள் காணப்பட்டுள்ளன.

வாகனத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள் சாரதியை நீதிமன்றில் முற்படுத்தினர். அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Copyright © 9134 Mukadu · All rights reserved · designed by Speed IT net