பொதுச்சந்தைகளின் உட்பகுதிகளில் புகைப்பிடித்தல் முற்றாக தடை!

பொதுச்சந்தைகளின் உட்பகுதிகளில் புகைப்பிடித்தல் முற்றாக தடை!

முல்லைத்தீவு – கரைதுரைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து பொதுச் சந்தைகளின் உட்பகுதிகளில் புகைத்தல் வெற்றிலை மெல்லுதல் மற்றும் மதுபானம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக கரைதுரைபற்று பிரதேச சபை இன்று அறிவித்துள்ளது.

பொதுச்சந்தைகளை ஒழுங்கு படுத்துவதற்காகவும் பொதுமக்களின் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த ஒழுங்குபடுத்தல் புகைப்பொருள் மற்றும் வெற்றிலை விற்பனையாளர்களின் மூலம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக கரைதுரைபற்று பிரதேச சபை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Copyright © 4324 Mukadu · All rights reserved · designed by Speed IT net