வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

களுத்துறை – மிரிஸ்வத்தை பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக குழல் துப்பாக்கிகள் இரண்டை பொலிஸார் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உவன்னோவிட்ட பிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த 44 மற்றும் 38 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீகாஹதென்ன பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net