ஜனாதிபதியால் தடைவிதிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஜனாதிபதியால் தடைவிதிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ‘டப்’ (கைக்கணினி) வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுமார் 2 இலட்சம் பேருக்கு கைக்கணினி வழங்குவதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு டெப் கணினிகள் வழங்கப்பட்டு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் சென்றால், அது அரசு மீது பூமாரங்காக திருப்பியடிக்கும் எனச் சுட்டிக்காட்டி அந்த திட்டத்துக்கு ஜனாதிபதி கடந்த ஜூலை 27ஆம் திகதி தடைவிதித்தார்.

அதனால் கடந்த 8 மாதங்களாக இந்த திட்டத்துக்கான அனுமதியை வழங்குவதில் அமைச்சரவைக்குள் இழுபறிநிலை நீடித்தது.

ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்களுக்கும் 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் டெப் கணினிகளை வழங்கும் திட்டத்தை 2017ஆம் ஆண்டு கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் டெப் கணினியை 27 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு வழங்கல் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த பெப்ரவரி நடந்த அமைச்சரவையில் இந்தத் திட்டத்தை இடைநிறுத்திவைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net