யாழில் அரச அதிகாரிகளின் அசமந்தத்தால் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட சோகம்!

யாழில் அரச அதிகாரிகளின் அசமந்தத்தால் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட சோகம்!

யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­ல­கத்­தி­ன­ரின் வார்த்­தையை நம்பி புதிய வீடு கட்­டு­வ­தற்­காக 7 ஆண்­டு­க­ளாக வாழ்ந்த கொட்­டிலை அகற்­றிய குடும்­பத் தலை­வர், அந்­தக் கொட்­டில் சரிந்து வீழ்ந்­த­தில் கால் முறி­வ­டைந்து படுக்­கை­யில் உள்­ளார்.

இந்த நிலை­யில், வீட்­டுத் திட்­டம் உங்­க­ளுக்கு (அந்­தக் குடும்­பம்) கிடைத்­துள்­ளது என்று தவ­று­த­லா­கக் கூறி­யுள்­ளோம் எனப் பிர­தேச செயலகத்தினர் தெரி­வித்­துள்­ள­னர்.

இத­னால் இருப்­ப­தற்கு இருப்­பி­டம் இல்­லா­மல், வாழ்­வா­தா­ரத்­துக்கு வழி­தெ­ரி­யா­மல் குடும்­பத்­தி­னர் அவ­ல ­நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

யாழ்ப்­பாண பிர­தேச செய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட இலக்­கம் 30, காரை­ந­கர் வீதி, மீனாட்­சி­பு­ரம் கோட்டை என்­னும் முகவ­ரி­யில் உள்ள குடும்பத்தினரே இத்­த­கைய நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்­ள­னர்.

திரு­ம­ண­மாகி கடந்த 19 ஆண்­டு­க­ளாக சொந்­தக் காணி, வீட்டு வச­தி­யின்றி இர­வல் காணி­யில் மு.சத்­தி­ய­கு­மார் இருந்துள்­ளார். கூலி­ வேலைகளைச் செய்து வாழ்க்­கையை நடத்தி வரு­கின்­றார்.

கடும் உழைப்­பால் யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட இலக்­கம் 30 காரைநகர் வீதி, மீனாட்­சி­பு­ரம், கோட்டை எனும் முக­வ­ரி­யில் உள்ள காணியை வாங்­கி­யுள்­ளார்.

அதில் தக­ரக் கொட்­டில் ஒன்றை அமைத்து அங்கு வசித்­துள்­ளார். அவ­ருக்கு இரண்டு பிள்­ளை­கள் பாட­சாலை செல்கின்­ற­னர். அவர்­க­ளு­டைய கல்­விச் செலவு, உள்­பட வாழ்­வா­தா­ரம் அனைத்­தும் அவ­ரு­டைய உழைப்­பில் இருந்தே பெறப்­ப­டு­கின்­றன.

சொந்­தக் காணி வைத்­தி­ருந்­தும், கடந்த 7ஆண்­டு­க­ளாக எந்­த­வொரு வீட்­டுத்­திட்­ட­மும் சத்­தி­ய­கு­மா­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

கடந்த 23ஆம் திகதி யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட வீடு­கள் அற்ற மக்­க­ளுக்கு பிர­தேச செய­ல­கத்­தில் கூட்­டம் இடம்­பெற்­றது.

யாழ்ப்­பா­ணத்­துக்கு 175 வீடு­கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இடைக்­கால கணக்கு அறிக்­கை­யின் ஊடாக 48 வீடு­க­ளுக்கு முதல்­கட்­ட­மாக நிதி கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

மீனாட்­சி­பு­ரம் பகு­தி­யில் 5 வீடு­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. சத்­தி­ய­கு­மா­ரும் அதில் ஒரு பய­னா­ளி­யா­கத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடு­க­ளுக்­கான அடிக்­கல் நடு­வ­தற்கு நாளையே – உட­ன­டி­யான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு பிர­தேச செய­ல­கத்­தி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

சத்­தி­ய­கு­மா­ரின் காணி சிறி­யது. தங்­கி­யி­ருந்த தற்­கா­லி­கக் கொட்­டிலை அகற்­றி­னாலே வீடு அமைக்க முடி­யும். அத­னை­ய­டுத்து இர­வோடு இர­வாக சத்­தி­ய­கு­மார் தற்­கா­லி­கக் கொட்­டிலை அகற்­றி­யுள்­ளார்.

எதிர்­பா­ராத வித­மாக கொட்­டில் சரிந்து சத்­தி­ய­கு­மா­ரின் மேல் வீழ்ந்­தது. அவர் படு­கா­யம­டைந்த நிலை­யில் யாழ்ப்பாணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். அவ­ருக்கு கால் முறிந்­துள்­ளது என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அவருடைய காலில் தகடு வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆறு மாதங்­கள் அவர் படுக்­கை­யி­லேயே இருக்க வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ள­னர்.

வீடு அமைப்­ப­தற்கு கடன் வாங்கி, கல் மற்­றும் மண் போன்­ற­வற்றை சத்­தி­ய­கு­மார் கொள்­வ­னவு செய்­துள்­ளார். பிரதேச செய­ல­கத்­தால் நடத்­தப்­பட்ட கூட்­டத்­துக்­குப் பின்­னர் பிர­தேச செய­ல­கம் சத்­தி­ய­கு­மா­ரு­ட­னோ, அவ­ரது மனை­வி­யு­டனோ தொடர்பு கொள்­ள­வில்லை.

சத்­தி­ய­கு­மா­ரின் மனைவி ஒரு வாரத்­தின் பின்­னர், பிர­தேச செய­ல­கம் சென்­றுள்­ளார். வீடு தொடர்­பில் விசா­ரித்­தார். அவ­ருக்­குப் பேர­திர்ச்சி கொடுக்­கும் தக­வலை பிர­தேச செய­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

வீடு உங்­க­ளுக்கு வர­வில்லை, தவ­று­த­லாக நீங்­கள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளீர்­கள் எனப் பிர­தேச செய­ல­கம் தெரிவித்துள்ளது என்று சத்­தி­ய­கு­மா­ரின் மனைவி தெரி­வித்­தார்.

மாவட்­டச் செய­ல­கத்­துக்­குச் சென்று விவ­ரங்­க­ளைப் பார்த்­த­போ­தும் அதில் தமது பெயர் இல்லை என்­றும் சத்­தி­யகுமாரின் மனைவி குறிப்­பிட்­டார்.

கொட்­டில் வீடு என்­றா­லும் நாளாந்­தம் உழைக்­கும் பணத்­தில் வாழ்ந்த சத்­தி­ய­கு­மார் குடும்­பம் தற்­போது அந்­தக் கொட்டி­லும் இன்றி, வாழ்­வ­தற்கு வீடும் இன்றி, சத்­தி­ய­கு­மா­ரின் உழைப்­பும் இன்­றித் துவண்­டு­போ­யுள்­ளது.

‘கடும் உழைப்­பாளி மாதம் 20ஆயி­ரம் ரூபாய் உழைப்­பார். அதி­லேயே பிள்­ளை­க­ளின் கல்­விச் செலவு, சாப்­பாடு என்று வாழ்ந்­து­வந்­தோம். இப்­போது வாழ்­வ­தற்கு வழி­யற்று நிற்­கின்­றோம்.

ஆறு­மா­தங்­கள் படுத்­தி­ருந்தே காயத்தை ஆற்ற வேண்­டும் என்று மருத்­து­வர்­கள் கூறி­யுள்­ள­னர். இனி எமக்கு எப்­படி வரு­மா­னம். இரண்டு பிள்­ளை­களை வைத்­துக் கொண்டு நான் எங்கு செல்­வேன். தற்­போது அய­லில் உள்ள ஒரு வீட்டில் அடைக்­க­லம் புகுந்­துள்­ளோம்.

படுக்­கை­யில் உள்ள எனது கண­வ­ரை­யும், பாட­சாலை செல்­லும் பிள்­ளை­க­ளை­யும் எத்­தனை நாளைக்கு இங்யே வைத்­தி­ருக்க முடி­யும்.

எமக்கு வீடு கிடைத்­துள்­ளது என்று கூறி கடி­தம் தந்­த­தால் தானே நாங்­கள் கொட்­டி­லைக் கழற்­றி­னோம். கடன்­பட்டு கல், மண் பறித்­தோம். இப்­போது அந்­தக் கடனை யார் கட்­டு­வார்­கள், நாங்­கள் சாப்­பி­டு­வ­தற்கு என்ன செய்­யப் போகின்றோம்?’ என்று சத்­தி­ய­கு­மா­ரின் மனைவி கண்­ணீர் வடித்­தார்.

சம்­ப­வம் தொடர்­பில் யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லர் பொ.தயா­னந்­த­னின் தனிப்­பட்ட அலை­பேசி இலக்­கத்­துக்கு குறித்த ஒரு தரப்பினரால் நேற்றுப் பகல் 1.10 மணிக்கு இரண்டு முறை அழைப்பு எடுத்­த­ போ­தும் அவர் பதி­ல­ளிக்­க­வில்லை.

மீண்­டும் 1.16 மணிக்கு அலு­வக தொலை­பே­சிக்கு அழைத்­த­போ­தும் பதி­ல­ளிக்­க­வில்லை. மூன்­றா­வது தட­வை­யாக பகல் 1.50 மணிக்கு பிர­தேச செய­ல­ரின் தனிப்­பட்ட அலை­பே­சிக்கு அழைப்பு எடுத்­த­போ­தும் அதற்­கும் பதி­ல­ளிக்­க­வில்லை.

இறு­தி­யாக 1.52 மணிக்கு அலு­வ­ல­கத் தொலை­பே­சிக்கு அழைப்பு எடுத்­த­போ­தும் பதி­ல­ளிக்­க­வில்லை.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net