கிளிநொச்சியில் பிரதமர் தலைமையில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் ஆரம்பம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணிக்கு கிளிநொச்சிக்கு சென்றிருந்தார்.
கிளிநொச்சி விஜயத்தின் முதல் கட்டமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர் அங்கு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பலர் பங்குபற்றியுள்ளனர்.
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முதல் கட்டமாக நேற்று, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













