திரைப்பட பாணியில் தெல்லிப்பழையில் திருட்டு சம்பவம்!

திரைப்பட பாணியில் தெல்லிப்பழையில் திருட்டு சம்பவம்!

திரைப்­பட பாணி­யில் யாழ்ப்­பா­ணம் தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் திருட்­டுச் சம்­ப­வம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

பெண்­ணொரு­வர் தனி­மை­யில் வாழ்ந்து வந்த வீட்டை நோட்­டம்­ விட்ட திரு­டர்­கள் அங்கு தமது கைவ­ரி­சை­யைக் காட்­டி­யுள்­ள­னர்.

வீடு பிரித்து இறங்­கிய திரு­டர்­கள் சமை­யல் அறை­யில் உள்ள பொருள்­கள், பாத்­தி­ரங்­கள் என அனைத்­தை­யும் திரு­டி­யுள்­ள­னர். எண்­ணெய்­யைக் கூட விட்­டு­வைக்­கா­மல் திரு­டிச் சென்­றுள்­ள­னர்.

அலு­மா­ரி­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த புட­வை­கள் அனைத்­தும் திரு­டப்­பட்­டுள்­ளன. படுக்­கை­ய­றை­யில் இருந்த கட்­டில், மெத்­தையை அப்­ப­டியே தூக்­கிச் சென்­றுள்­ள­னர்.

போகும் போது திரு­டி­யது யார் என்று பொலி­ஸார் கண்­டு­பி­டிக்­கா­த­வாறு தமது கைய­டை­யா­ளங்­கள், கால் பட்ட இடங்­க­ளுக்கு மிள­காய்த் தூள் தூவி­விட்­டுத் தப்­பித்­துள்­ள­னர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net