பிளவடைந்த நாட்டை ஒன்றிணைக்க அரசியல் தீர்வு அவசியம்!

பிளவடைந்த நாட்டை ஒன்றிணைக்க அரசியல் தீர்வு அவசியம்!

பிளவடைந்துள்ள நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் அரசியல் தீர்வு அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் பயண பூர்த்தியை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் ரணில் இதனை குறிப்பிட்டார்.

மேலும் நாட்டை ஒன்றிணைக்கும் விடயத்தில் அனைத்து மக்களும் சிந்தித்து செயலாற்றும்போதே சிறந்த பயனை அடைய முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் தற்போதைய சூழ்நிலையில் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியது நாட்டின் முக்கிய தேவையாக உள்ளதெனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 7102 Mukadu · All rights reserved · designed by Speed IT net