திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை அங்குரார்ப்பணம்.
திருகோணமலையில் புனருத்தாபனம் செய்யப்பட்ட திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கே. துரைரட்ணசிங்கம், சுசந்த புஞ்சிநிலமே, தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் ஆகியோர் திருவுருவ சிலையை திறந்து வைத்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர், தொண்டர் சபையினர், திருமலை மாவட்ட கடற்படை தளபதி மற்றும் சைவ அடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.