போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வமத தலைவர்கள் கோரிக்கை.

போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வமத தலைவர்கள் கோரிக்கை.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் சர்வமதங்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 19ஆம் திகதி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு மற்றும் கிழக்கில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மட்டக்களப்பு மாவட்ட சர்வமத தலைவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அன்றைய தினம் வர்த்தக நிலையங்களை மூடியும் போக்குவரத்துகளை இடைநிறுத்தியும் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இடம்பெறவுள்ள பேரணிக்கு ஒத்துழைப்பு தருமாறு மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net