கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு விபத்து : ஒருவர் பலி.

கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு விபத்து : ஒருவர் பலி.

கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவரும் மோதியதாகவும், வீதியில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து லொறியும், சாரதியும் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி அக்கராயன் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய சந்தியாபிள்ளை பீற்றர் இமானுவேல் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும், குறித்த விபத்து இரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸ் பொருப்பதிகாரி ஜி.எல்.ஏ ஜே குணவர்தண தெரிவிக்கின்றார்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net