இராணுவ விடுதிக்கு காணி சுவீகரிக்க அனுமதியோம்!
காங்கேசன்துறை ‘தல்செவன’ இராணுவ விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாதெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதியை அடுத்த வாரம் தாம் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
காங்கேசன்துறை ‘தல்செவன’ இராணுவ விடுதியை மையமாக கொண்டு அந்த விடுதியை சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவ நிர்வாகத்தின் சுற்றுலா பயன்பாட்டுக்காக சுவீகரிக்கப்படும் நடவடிக்கையை நிறுத்துமாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர், காணி அமைச்சுடன் பேச்சு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.