ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் லீலாதேவி தெரிவித்தார்.

ஜெனீவாவில் வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கை அரசாங்கம் இந்த பிரேரணையை வரவேற்கும் என்றால், அது அவர்களுக்கு சாதகமாக வந்துள்ளது. எனவே அவர்கள் அதனை வரவேற்கத்தான் வேண்டும்.

எங்கள் பிரதிநிதிகளை துணையாகக்கொண்டு இந்த பிரேரணையை அவர்கள் தாங்கள் நினைத்தவாறு முடித்துள்ளார்கள். எனவே அவர்கள் அதனை வரவேற்கத்தான் வேண்டும்.

எனினும் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் இந்த புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை“ என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net