முல்லைத்தீவில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருவர் பலி!

முல்லைத்தீவில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருவர் பலி!

முல்லைத்தீவு துணுக்காய் கல்விளான் சந்திப்பகுதியில் நேற்று காலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருபிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், நான்குபேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு பழைய முறிகண்டிப்பகுதியிலிருந்து மன்னார் இலுப்பைக்கடவைக்கு நேற்று காலை சென்ற உழவுஇயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

துணுக்காய் சந்தியிலிருந்து கல்விளான் சந்தியூடாக இலுப்பைக்கடவை நோக்கிப்பயணித்த மேற்படி உழவுஇயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கல்கவிளான் சந்திப்பகுதியில் உழவுஇயந்திரப்பெட்டி தடம் புரண்டுள்ளது.

இதில் பெட்டியில் இருந்த பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இதில் படுகாயமடைந்த நால்வர் உடனடியாக மல்லாவி வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இரண்டுபேர் மல்லாவி வைததியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தின் போது பழைய முறிகண்டியைச்சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் த்ந்தையே உயிரிழந்துள்ளார்.

ஊயிரிழந்தவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையிலிருந்து மரண விசாரணைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுள்ளதுடன். இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவிப்பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net