யாழ்.குப்பிளானின் மின்னல் தாக்கம்! -3 பேர் பலி!
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இன்று நண்பகல் தொடங்கு பெய்து வரும் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த இரு பெண்களும், ஒரு ஆணுமே உயிரிழந்தனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு பரிசோதணைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.