சற்றுமுன் விசுவமடு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!
சில மணிநேரம் முன்பாக முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.
தர்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17)இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மழை வந்ததால் மரத்தின்கீழ் நிற்கும்போது மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.