கிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை : கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு.
கிளிநொச்சி் அறிவியல் நகர் பகுதியில் வசித்து வந்த 19 வயதுடைய சத்திய சீலன். சத்திய ராஜ் எனும் இளைஞன் கடந்த திங்கள் (15/04/2019) அன்று உறவினர் வீடு செல்வதாக கூறி இன்று வரை வீடு திரும்பவில்லை.
குறித்த நபர் வேலை செய்யும் இடம் மற்றும் உறவினர் வீடுகள் எங்கும் தேடியும் இன்றுவரை காணவில்லை. என்று குறித்த நபரின் தாயார் கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்