வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு கிளிநொச்சியில் அங்சலி.

வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு கிளிநொச்சியில் அங்சலி.

நேற்றய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு இன்று கிளிநொச்சியில் அங்சலி இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு 6 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிரிழந்த மக்களிற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் இடம்பெற்றதுடன், உயிரிழந்தவர்களிற்கு அங்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Copyright © 1290 Mukadu · All rights reserved · designed by Speed IT net