மன்னாரில் கடும் சோதனை நடவடிக்கை!

மன்னாரில் கடும் சோதனை நடவடிக்கை!

மன்னார் நகரில் இன்று காலை முப்படையினர் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய கிராமங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்ற படையினர் முழுமையான சோதனையை மேற்கொண்டுள்ளதுடன், வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பரிசீலனை செய்துள்ளனர்.

அத்துடன் அந்த பகுதிகளில் வீதியால் செல்பவர்களின் அடையாள அட்டைகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்களும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net