பௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணை!

பௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணை! நபரொருவர் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் பௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணையினை இன்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இந்த தலையணைகளை கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தலையணைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © 1855 Mukadu · All rights reserved · designed by Speed IT net