ஆடை களஞ்சியசாலையில் தீ விபத்து – 5 பேர் பலி!

ஆடை களஞ்சியசாலையில் தீ விபத்து – 5 பேர் பலி!

மஹராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள ஆடையகமொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தீயணைப்புத்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net