அடுத்த தேர்தலிலும் நாங்கள் தனித்தே நிற்போம்.

இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் கமலின் மக்கள் நீதி மையமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக களமிறங்கி ஏட்டிக்கு போட்டியாக வாக்குத் தொகையில் முன்னும் பின்னுமாக இருக்கிறார்கள்

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய சீமான்,

“தேர்தலில் கமலுடைய பங்களிப்பு எதுவும் இல்லை என்று கூறிய அவர் வடிவேலுவின் நகைச்சுவைப் பாணியில் வெள்ளையா இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் உழைக்கும் மக்கள். அடுத்த தேர்தலில் அவர் தோல்விக்கு தயாரா என தெரியவில்லை. அடுத்த தேர்தலிலும் நாங்கள் தனித்தே நிற்போம்.” என தெரிவித்துள்ளார்.

Copyright © 9316 Mukadu · All rights reserved · designed by Speed IT net