கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் குறித்த சந்திப்பில் தற்போது தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழர்களின் தீர்வு விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு, ஏப்ரல் 21க்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக்காட்டினார்.

குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 9454 Mukadu · All rights reserved · designed by Speed IT net