வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வவுனியா- தேக்கவத்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேக்கவத்தைப் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் தூளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு அவரிடமிருந்து 2கிராம் 170மில்லிகிராம் ஹெரோயின் தூள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Copyright © 2349 Mukadu · All rights reserved · designed by Speed IT net