செய்தியாளரின் வாயில் சிறுநீர் அடித்த போலீசார்!

தடம் புரண்ட ரயிலை காட்சிப்படுத்திய செய்தியாளரின் வாயில் சிறுநீர் அடித்த போலீசார்!

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், ரயில் தடம் புரண்டதை காட்சிப்படுத்திய அமித் ஷர்மா என்ற பத்திரிகையாளரை இந்திய ரயில்வே போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ அவர்கள் போலீஸ் உடையில் இல்லை. அவர்களில் ஒருவர் என் கேமராவை தள்ளிவிட்டார், அதனை நான் எடுக்க முயன்ற போது என்னை கடுமையாக தாக்கினர். மேலும் என் வாயில் சிறுநீர் அடித்தனர்” என்று வேதனை தெரிவித்தார்.

அமித்ஷா தாக்கப்பட்டதை கண்டித்து சக பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, ரயில் போலீசார் ராகேஷ் குமார் மற்றும் கான்ஸ்டெபிள் சஞ்சய் பவார் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Copyright © 0401 Mukadu · All rights reserved · designed by Speed IT net