வவுனியா விபத்தில் இளைஞன் பலி!

வவுனியா விபத்தில் இளைஞன் பலி!

வவுனியாவில், கற்பகபுரம் பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த சிவபெருமாள் கஜேந்திரன் (வயது 25) என்ற இளைஞன் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக ஹயஸ் ரக வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், ஹயஸ் வாகன சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 4947 Mukadu · All rights reserved · designed by Speed IT net