தி.மு.க– காங்கிரஸ் தேர்தலில் தோல்வியை சந்திப்பது உறுதி!

தி.மு.க– காங்கிரஸ் தேர்தலில் தோல்வியை சந்திப்பது உறுதி!

தி.மு.க– காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான கூட்டணி, எதிர்வரும் தேர்தல்களில் கடும் தோல்வியை சந்திக்குமென மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே இராதாகிருஸ்ணன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க தற்போது கூடாதவர்களுடன் இணைந்து கூட்டணி அமைந்துள்ளது. அதன் விளைவுகளை எதிர்வரும் காலங்களில் அனுபவிக்க போகின்றதெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கூட்டணி என்ற பெயரில் இவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடு சிவாஜி கணேசனின் நடிப்பையே விஞ்சும் அளவிற்கு உள்ளதாகவும் இராதாகிருஸ்ணன் விமர்சித்தார்.

Copyright © 1769 Mukadu · All rights reserved · designed by Speed IT net