பா.ஜ.க தமிழகத்தில் நிச்சயம் கால் பதிக்கும்!

பா.ஜ.க தமிழகத்தில் நிச்சயம் கால் பதிக்கும்!

தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி நிச்சயமாக வேரூன்றுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

நெல்லையில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடத்தில் கருத்து வெளியிட்டபோதே தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வங்கிகளிலும் 15 இலட்சம் இந்திய ரூபாயை சேமித்து வைப்பேன் என பிரதமர் மோடி கூறியதாக சில கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன.

ஆனால், வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் மட்டுமின்றி உள்நாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணங்களை மீட்டால் அது ஒரு குடும்பத்துக்கு 15 இலட்சம் திட்டங்கள் தோற்றம் பெறுவதற்கு வழிவகுக்குமென்றே மோடி கூறினார்.

மேலும் 5 இலட்சம் திட்டம் மருத்துவ காப்பீடாக தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அந்தவகையில் தமிழகத்துக்கே அதிகளவான திட்டங்களை மத்திய அரசு தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

ஆகையால் பா.ஜ.க தமிழகத்தில் கால் பதிப்பது உறுதி” என தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Copyright © 6323 Mukadu · All rights reserved · designed by Speed IT net