கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை ஆரம்பம்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை ஆரம்பம்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை நாளைமுதல் ஆரம்பமாக உள்ளது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் குறித்த சத்திரசிகிச்சைகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

குறித்த நிகழ்வு நாளை காலை 8.30 மணியளவில .வைத்தியர் த.காண்டீபன் தலைமையில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வில் கண் சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைக்கப்படவுள்ளதுடன், கண் சத்திர சிகிச்சையும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதுவரை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கண் சத்திர சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களிற்கு நோயாளர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சத்திர சிகிச்சைகள் இடம்பெற்ற வந்தன.

இந்த நிலையில் நாளைமுதல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் இடம்பெற ஆரம்பிக்க உள்ளதால் பிரதேச மக்கள் அனைவரும் நன்மை பெறுவர் என நம்பப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net