யாழில் காணாமல்போன வயோதிப பெண் சடலமாக கண்டெடுப்பு!

யாழில் காணாமல்போன வயோதிப பெண் சடலமாக கண்டெடுப்பு!

யாழ். வடமராட்சி பகுதியில் காணாமல்போன வயோதிப பெண் பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

புலோலி கிழக்கைச் சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் வயோதிப பெண்ணே இன்று (சனிக்கிழமை) இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்மணி கடந்த 20ஆம் திகதி காணாமல் போனதாக அவரது உறவினர்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில், வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 9979 Mukadu · All rights reserved · designed by Speed IT net