மாணவ தலைவர்களது விடுதலைக்கு குரல்!

மாணவ தலைவர்களது விடுதலைக்கு குரல்!

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்களென கூறப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக சுற்றாடல் எங்கும் குறித்த பதாதைகள் ஆங்கில மொழியில் தொங்கவிடப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவ தலைவர்களது கைதின் தொடர்ச்சியாக கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net