ஈரான் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் படுகாயம்!

ஈரான் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் படுகாயம்!

தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3பேர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியா கடற்பகுதியில் குறித்த மீனவர்கள், மீன் பிடித்துவிட்டு திரும்பும்போதே அவர்கள் மீது (சனிக்கிழமை) துப்பாக்கி பிரயோகத்தை ஈரான் கடற்படை இராணுவம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களே இதனால் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை தமிழக மீனவர்கள், இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net