இராணுவ வாகனம் மோதியதில் உயரழுத்த மின்சார கம்பம் முறிந்துள்ளது.

இராணுவ வாகனம் மோதியதில் உயரழுத்த மின்சார கம்பம் முறிந்துள்ளது.

கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவத்தின் கனரக வாகனம் மோதியதில் மின் கம்பம் முறிந்துள்ளது.

இன்று(21) மாலை நான்கு 45 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால் மின்சார சபை உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு அனர்தத்தை தவிர்த்துள்ளனர்.

பரந்தன் பகுதியில் இருந்து இரணைடுமடு நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தின் கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதனால் இவ் விபத்து எற்பட்டுள்ளது.

Copyright © 1208 Mukadu · All rights reserved · designed by Speed IT net