சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த தம்பிக்கு ஏற்பட்ட பரிதாபம்.


வவுனியாவில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த தம்பிக்கு ஏற்பட்ட பரிதாபம்.

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலமொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் குறித்த சிறுவன் தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில் விளையாடியுள்ளார்.

இதன்போது 7 வயதான சிவலிங்கம் அலெக்சன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

சடலம் நெடுங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விளையாடி கொண்டிருந்த போது சிறுவன் தவறுதலாக உள்ளே விழுந்திருக்கலாம் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரமும் வவுனியா – கற்குளம் பகுதியில் 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net