செம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைக்க அங்கீகாரம்.

செம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைக்க அங்கீகாரம்.

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (வியாழக்கிழமை) வடக்கிற்கு சென்ற பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன்போது யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் இந்த திட்டத்திற்கான மாதிரி வரைபை சமர்ப்பித்திருந்ததுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பிரதி ஒன்றை வழங்கியிருந்தார்.

இதனை ஆராய்ந்த பிரதமர், குறித்த நவீன நகர திட்டம் சிறந்த திட்டம் என கூறியதுடன், முதல்வருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வர், குறித்த நகரத்தை அமைப்பதற்கான நிதி மூலத்தை கண்டறிவதற்கு பிரதமர் ரணில் விக்கரமசிங்க இணக்கம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net