கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள ஆலயங்களில் திருடியவர் கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள ஆலயங்களில் திருடியவர் கைது!

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நான்கு ஆலயங்களில் பொருட்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலயம், விநாயகபுரம் நாகதம்பிரான் ஆலயம், மருதநகர் சிவமுத்துமாரியம்மன் ஆலயம், மருதநகர் சித்தி விநாயகர் ஆலயம் என்பவற்றில் உற்சவத்திற்கு பயன்படுத்தும் பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விநாயகபுரத்தினை சேர்ந்த குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 26 சிலம்புகள் மாத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர் கல்குடா பகுதியில் பல திருட்டு சம்பங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளி எனவும் பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

மேலும், சந்தேக நபர்கள் உள்ளனரா என்ற விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net