யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!

யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!

யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இரவு தபால்சேவை ரயிலுடன் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தற்கொலை முயற்சியாக இருக்கலாம் எனவும், இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net