அபிநந்தனால் அனைத்து இந்தியருக்கும் பெருமை!
தமிழ்நாட்டை சேர்ந்த மாவீரர் அபிநந்தனால் அனைத்து இந்தியரும் பெருமைப்படுவதாக என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்தியாவின் பெண் இராணுவ அமைச்சராக பதவி வகிப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
இதேபோல், அனைத்து இந்தியர்களும் விமானப்படையை சேர்ந்த மாவீரர் அபிநந்தன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அனைத்து இந்தியரும் பெருமைப்பட வேண்டும்“ என குறிப்பிட்டுள்ளார்.