விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு விளக்கமறியல்!

விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு விளக்கமறியல்!

வீதி­யால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி­விட்டு, தப்­பி­யோ­டி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் பட்டா ரக வாக­னச் சார­தியைச் சாவ­கச்­சேரிப் பொலி­ஸார் கைதுசெய்து, நீதி­மன்­றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு உத்தரவிட்டாடர்.

கடந்த 25 ஆம் திகதி இரவு சாவ­கச்­சே­ரிக்­குச் சென்று விட்டு ஏ –9 முதன்­மைச் சாலை­யில் யாழ்ப்­பா­ணம் திரும்­பிய மோட்டார் சைக்கிளை கைதடி நுணா­வில் பகு­தி­யில் ஒழுங்­கை­யொன்­றி­லி­ருந்து முதன்மை வீதிக்கு வந்த பட்டா ரக வாக­னம் மோதி 75 மீற்­றர் தூரம் வரை இழுத்­துச் சென்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

பட்டா ரக வாக­னம் சாரதி – காய­ம­டைந்த தம்­ப­தியை அவ்­வி­டத்­தில் விட்­டு­விட்டு அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்­ளார்.

இவர்­கள் காய­ம­டைந்த நிலை­யில் சாவ­கச்­சேரி வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணப் போதனா வைத்தியசாலைக்கு மாற்­றப்­பட்­ட­னர்.

விபத்து தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலி­ஸார் கைதடி நுணா­வில் ரயர் நிறுவனத்துக்கு அரு­கில் உள்ள காணி­யொன்­றில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த விபத்தை ஏற்­ப­டுத்­திய வாக­னத்­தைக் கைப்­பற்­றி­ய­து­டன் அதே இடத்­தைச் சேர்ந்த சந்தேக நபரையும் என்­ப­வ­ரை­யும் கைதுசெய்­த­னர்.

இந் நிலையல் கடந்த 26 ஆம் திகதி அவரை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net