புதிய இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்ததயார்!

புதிய இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்ததயார்!

புதிதாக அமைந்துள்ள இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்முத் குரேஷி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்தும் போசிய அவர்,

“இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசுடன், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அரசு தயாராகவுள்ளது.

அந்தவகையில், இரு நாடுகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகாண வேண்டும்” எனக் கூறினார்.

Copyright © 0044 Mukadu · All rights reserved · designed by Speed IT net