மன்னார், சிலாபத்துறையில் பீடி இலைகளுடன் இருவர் கைது!

மன்னார், சிலாபத்துறையில் 287.3 கி.கி. பீடி இலைகளுடன் இருவர் கைது!

மன்னார், சிலாபத்துறை பகுதியில் 287.3 கிலோகிராம் பீடி இலைகளுடன் இருவரை கடற்படையினர் இன்று (07) கைதுசெய்துள்ளனர்.

லொறியொன்றில் கொண்டு செல்வதற்கு தயாராகவிருந்த நிலையிலேயே குறித்த பீடி இலைகளை கைப்பற்றியுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் தாம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் பீடி இலைகளை கைப்பற்றியுள்ளதோடு, 17 மற்றும் 46 வயதுடைய இரு சந்தேக நபர்களை இதன்போது கைதுசெய்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக சிலாபத்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

Copyright © 5194 Mukadu · All rights reserved · designed by Speed IT net