சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது.

திருகோணமலை, மலைமுந்தல் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7மீனவர்களை கடற்படையினர் இன்று (08) கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர்களை கைதுசெய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு, ஒரு இஞ்சின் மற்றும் சட்டவிரோத மீன்பிடி வலைகளை கைப்பற்றியுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்றை சேர்ந்த 18 வயது முதல் 27 வயது வரையானவர்களையே இவ்வாறு கைதுசெய்துள்ளதாக தெரிவித்த கடற்படையினர், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்பிடித் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net