யாழில் டைனமைட் வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

யாழில் டைனமைட் வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

யாழ். குருநகரில் கடற்றொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமைட் வெடிபொருள் வெடித்ததில், படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருநகர் பற்றிக் வீதியிலுள்ள வீடொன்றிலேயே நேற்றிரவு (07) இந்தச் சம்பவம் இடம்பெற்றாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவரை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, இது தொடர்பாக பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net